அகில இந்திய கூடைப்பந்து போட்டி; சென்னை - வருமானவரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி வெற்றி

முதல் நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை - வருமானவரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி, பெண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம், கிழக்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே அணிகள் வெற்றி



Coimbatore: அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவையில் நேற்று மாலை 4.00 மணிக்கு துவங்கியது.

இதில் 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் பிரிவில் முதல் நாள் மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை - வருமான வரி அணியை எதிர்த்து கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைபந்து கழக அணி விளையாடியது, இதில் வருமான வரி அணி 88 - 75 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து புதுடெல்லி - மத்திய செயலக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 64 - 55 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

21 வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிர் பிரிவு முதல் நாள் மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநிலம் மின்சார வாரிய அணியை எதிர்த்து கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநிலம் மின்சார வாரிய அணி 99 - 42 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா - கிழக்கு ரயில்வே அணியை எதிர்த்து சென்னை - ரைசிங் ஸ்டார் அணி விளையாடியது. இதில் 81 - 71 என்ற புள்ளி கணக்கில் கிழக்கு ரயில்வே அணி வென்றது.

இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் செகந்திராபாத் - தென் மத்திய ரயில்வே அணியை எதிர்த்து மும்பை - மேற்கு ரயில்வே அணி விளையாடியது. இதில் 80 - 45 என்ற புள்ளி கணக்கில் தென் மத்திய ரயில்வே அணி வென்றது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...