அகில இந்திய கூடைப்பந்து போட்டி; சென்னை - வருமானவரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி வெற்றி

முதல் நாள் போட்டியில் ஆண்கள் பிரிவில் சென்னை - வருமானவரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி, பெண்கள் பிரிவில் கேரளா மாநில மின்சார வாரியம், கிழக்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே அணிகள் வெற்றி



Coimbatore: அகில இந்திய கூடைப்பந்து போட்டி கோவையில் நேற்று மாலை 4.00 மணிக்கு துவங்கியது.

இதில் 57-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆடவர் பிரிவில் முதல் நாள் மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை - வருமான வரி அணியை எதிர்த்து கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைபந்து கழக அணி விளையாடியது, இதில் வருமான வரி அணி 88 - 75 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து புதுடெல்லி - மத்திய செயலக அணி விளையாடியது. இதில் கேரளா மாநில மின்சார வாரிய அணி 64 - 55 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

21 வது சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பைக்கான மகளிர் பிரிவு முதல் நாள் மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற முதல் போட்டியில் திருவனந்தபுரம் - கேரளா மாநிலம் மின்சார வாரிய அணியை எதிர்த்து கோயம்புத்தூர் - கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மாநிலம் மின்சார வாரிய அணி 99 - 42 என்ற புள்ளி கணக்கில் வென்றது.



மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் கொல்கத்தா - கிழக்கு ரயில்வே அணியை எதிர்த்து சென்னை - ரைசிங் ஸ்டார் அணி விளையாடியது. இதில் 81 - 71 என்ற புள்ளி கணக்கில் கிழக்கு ரயில்வே அணி வென்றது.

இரவு 7.00 மணிக்கு நடைபெற்ற மூன்றாவது போட்டியில் செகந்திராபாத் - தென் மத்திய ரயில்வே அணியை எதிர்த்து மும்பை - மேற்கு ரயில்வே அணி விளையாடியது. இதில் 80 - 45 என்ற புள்ளி கணக்கில் தென் மத்திய ரயில்வே அணி வென்றது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...