கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் கலைஞரின் படத்திற்கு மரியாதை

வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


கோவை: கோவை நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வெற்றி பெற்ற, கணபதி ராஜ்குமார் எம்பி., நேற்று 4-6-2024, செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணியளவில், கோவை வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள, கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் முத்தமிழறிஞர் செம்மொழிக் காவலர் கலைஞரின்திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா முத்தமிழறிஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.



உடன் கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், தலைமைக் கழக நிர்வாகிகள் மகேந்திரன், அ.தமிழ்மறை, வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அசோக் ஆறுக்குட்டி, தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.பி.கண்ணப்பன், ஆனந்தகுமார், காந்திபுரம் பகுதிச் செயலாளர் ‌ஆர்.எம்.சேதுராமன், அணிகளின் அமைப்பாளர்கள் ஆர்.கே.சுரேஷ்குமார், கோவை அபு, சிவராமன், கே.டி.தியாகராஜன், சி.வி.தீபா, அன்னம்மாள் ex.mc., வட்டக் கழகச் செயலாளர்கள் எஸ்.போஸ், கே.ராமநாதன், டவுன் பா.ஆனந்த், ஏ.எஸ்.நடராஜ், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...