கோவையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு தலைகாட்டாத அண்ணாமலை..!

பா.ஜ.க. மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




கோவை: நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், கோவையில் 24 சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

கோவையில் தடாகம் சாலையில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்த மையத்தில் பல்வேறு கட்சி முகவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முகாமிட்டுள்ளனர்.

இவர்களோடு திமுக., அதிமுக.,வேட்பாளர்களான கணபதி ராஜ்குமார் மற்றும் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.

ஆனால், காலையில் இருந்தே பா.ஜ.க. மாநில தலைவரும் கோவை தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை வரவில்லை. காலையில் இருந்து நடைபெற்ற ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையில் கூட அண்ணாமலை முன்னிலை வகிக்கவில்லை. இதனால் அவர் கோவையில் இருந்துகொண்டே வாக்கு எண்ணும் மையத்தை எட்டிப்பார்க்கவில்லை என்று கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர். இது பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...