கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த பெண் மீது சமூகவலைதளத்தில் அவதூறு பரப்பியதுக்காக குண்டாஸ்

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விஷ்வதர்ஷினி என்பவர் தொடர்ந்து மிரட்டுவது, அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எனவே இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விஷ்வதர்ஷினி(44). இவர் பேஸ்புக் மூலம் கோவை சேரன் மாநகரை சேர்ந்த செலினா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது தான் ‘டைகர்வே’ என்ற டிரஸ்ட் நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார்.

பின்னர் பணத்தை திரும்ப கேட்டபோது செலினாவை பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து செலினா செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், செல்வபுரம் போலீசார் கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஷ்வதர்ஷினியை கைது செய்தனர். 

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், விஷ்வதர்ஷினி காவல்துறைக்கு எதிராக பொது மக்களை தூண்டும் விதமாகவும், மிரட்டுவது போல பேசிய ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இதனைத்தொடர்ந்து செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா அளித்த புகாரின்பேரிலும் அவர் கைது செய்யப்பட்டார். 

ஏற்கனவே விஷ்வதர்ஷினி மீது கடந்த 24.01.2024ம் தேதி கோவை துடியலூர் காவல் நிலையத்தில் போலீசாரை ஆபாசமாக பேசி பணி செய்யவிடாமல் தடுத்தது மற்றும் கடந்த 2020ம் ஆண்டு சமூக வலைதளத்தின் மூலம் நண்பர் போல் நடித்து, பிரகாஷ் ஸ்வாமி என்ற பத்திரிக்கையாளரை முகநூல் பக்கத்தில் அவதூறு பரப்பி விடுவேன் மிரட்டிய வழக்குகளும் உள்ளன.

மேலும் விஷ்வதர்சினி மீது கடந்த 2018ம் வருடம் சிறுமியை பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாகவும், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் விஷ்வதர்ஷினிக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

விஷ்வதர்ஷினி என்பவர் தொடர்ந்து மிரட்டுவது, அவதூறு பரப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார். எனவே இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று ஜூன்.1 உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீசார் மத்திய பெண்கள் சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...