கோவையில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் கோளாறு - பயணிகள் அவதி

கோவையில் இருந்து இன்று காலை 4.15 மணிக்கு ஏர் அரேபியா விமானம், சார்ஜா செல்வதற்காக ஓடுதளத்தில் இருந்து புறப்பட தயரானது. அப்போது, விமானத்தின் ஒரு டயர் பஞ்சரானதால், பயணிகள் அனைவரும் அவசரமாக தரையிறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட உள்ளிட்ட நகரங்களும் தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வழக்கம்போல இன்று ஜூன்.1 காலை 4:15 மணிக்கு சார்ஜா செல்லக்கூடிய ஏர் அரேபியா விமானம் 145 பயணிகளுடன் ஓடுதளத்தில் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தின் ஒரு டயர் பஞ்சராகி இருப்பது தெரியவந்தது. இதனால் விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் அவசரமாக தரையிறக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து விமானத்தின் கோளாறு சரி செய்த பின்னர் மாலை 6 மணிக்கு விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக விமான பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...