கோவையில் இருந்து சார்ஜா செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் கோளாறு - பயணிகள் அவதி

கோவையில் இருந்து இன்று காலை 4.15 மணிக்கு ஏர் அரேபியா விமானம், சார்ஜா செல்வதற்காக ஓடுதளத்தில் இருந்து புறப்பட தயரானது. அப்போது, விமானத்தின் ஒரு டயர் பஞ்சரானதால், பயணிகள் அனைவரும் அவசரமாக தரையிறக்கப்பட்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், மும்பை, சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட உள்ளிட்ட நகரங்களும் தினமும் ஏராளமான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, வழக்கம்போல இன்று ஜூன்.1 காலை 4:15 மணிக்கு சார்ஜா செல்லக்கூடிய ஏர் அரேபியா விமானம் 145 பயணிகளுடன் ஓடுதளத்தில் புறப்பட தயாரானது. அப்போது விமானத்தின் ஒரு டயர் பஞ்சராகி இருப்பது தெரியவந்தது. இதனால் விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் அவசரமாக தரையிறக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து விமானத்தின் கோளாறு சரி செய்த பின்னர் மாலை 6 மணிக்கு விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக விமான பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...