உறுதி அளிக்கபட்ட வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக் கோரி மண்பாண்ட தொழிலாலர் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு நிலங்களில் தேவையான களிமண் எடுத்து கொள்ள சிறப்பு சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மண்பாண்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.



இதுகுறித்து மனு அளிக்கவந்த மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், மண்பாண்ட தொழிலில் சுமார் 40 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2016 பிப்ரவரி 14ம் தேதியன்று சென்னை வண்டலூரில் அகில உலக மண்பாண்ட தொழிலாளர்கள் மாநாட்டு நடைபெற்றது.

இதில், மழைக் கால பராமரிப்பு உதவி தொகை 5 ஆயிரம் வழங்கிட வேண்டும். தொழில் கூடங்கள் அமைக்க மானியம் வழங்க வேண்டும். அரசு நிலங்களில் தேவையான களிமண் எடுத்துக் கொள்ள சிறப்பு சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்கள் தமிழக அமைச்சர்களிடம் அளிக்கபட்டது. இதில் 4 தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். 

அவர்கள் உறுதியளித்து ஒரு ஆண்டு கடந்த நிலையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்" இவ்வாறு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...