சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு – விவசாயிகள், காவல்துறை இடையே தள்ளுமுள்ளு

காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஏலம் விட முடியாமல் அறநிலைத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இனம் நிலங்களை கடந்த மூன்று தலைமுறைகளாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிவன்மலை கோவிலுக்கு சொந்தமான நிலத்தை நேற்று முன்தினம் ஏலம் விடப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலகத்தில் அறிவிப்பை ஒட்டிவைத்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று ஏலம் துவங்கும் முன்பே விவசாயிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு முறையிட்டனர். ஆனால் விவசாயிகளை காவல்துறையினரை வைத்து தடுத்து கோவில் மேல் மண்டபத்தில் தனிநபர்கள் 15 பேர் மட்டுமே அனுமதித்து ஏலம் விடமுயற்சி செய்தனர். ஆனால், தடைகளையும் மாறி ஏலம் நடைபெறும் இடத்திற்கு சென்று விவசாயிகள் கோஷமிட்டனர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையை தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்பி கனிமொழி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன், சேகர்பாபு, கயல்விழி செல்வராஜ் ஆகியோரின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என்று பெண் விவசாயிகள் ஆவேசமாக பேசினர்.

இதனால் ஏலம் நடத்தமுடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். அறநிலையத்துறை அலுவலகத்திற்குள்ளும் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இதனால் சிவன்மலை பகுதியில் பரபரப்பு நிலவி வருகின்றது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...