கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியின் ஆலோசனைக் கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணியின் கூட்டம் இன்று நடைபெற்றது. தொண்டாமுத்தூர் அ.ரவி மற்றும் செ.அந்தோணிராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொண்டாமுத்தூர் அ. ரவி அவர்கள் தலைமையில், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ் முன்னிலையில், 28.05.2024 இன்று 4.00 மணியளவில் கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி சார்பாக ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. 



மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஞா.சிவக்குமார், E.M.S.ரபிதீன், சா.தினேஷ்குமார், ச.சரண்யா, ரா.மனோஜ்குமார் அனைவரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1:

தலைவர் முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவை தொகுதி வாரியாக இரண்டு பள்ளிகளை தேர்ந்தெடுத்து, நோட்டு புத்தகங்கள் வழங்குவது.

தீர்மானம் 2:

ஒன்றிய நகர பகுதி பேரூர் கழகங்களில் மாணவர் அணி அமைப்பாளர் / துணை அமைப்பாளர் இறுதி பட்டியல் தயாரிப்பது.

தீர்மானம் 3:

வரும் கல்வியாண்டில் கோவை வடக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்வி நிலையங்களான கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் 12ஆம் வகுப்பு பள்ளிகள், கல்லூரி விடுதிகளில் ”தமிழ் மாணவர் மன்றம்” அமைப்பை உருவாக்கி புதிய உறுப்பினர்கள் சேர்த்து, நிர்வாகிகளை நிர்வகிக்கும் பணியினை விரைவாக துவக்கிட மாவட்ட துணை அமைப்பாளர்களுக்கு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4:

ஜூன் மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டியில், மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் முதல் பரிசு பெற்ற நான்கு நபர்களை அழைத்து செல்வது.

தீர்மானம் 5:

நடப்பாண்டிற்கான முத்தழிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு பிறந்த நாள் விழாவிற்கான பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளை மீண்டும் ஜூலை மாதத்தில் நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது.

தீர்மானம் 6:

கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு பாராளுமன்ற தேர்தலில் பணியாற்ற வாய்ப்பு வழங்கிய மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தீர்மானம் 7:

மாணவர் அணியை சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கக் கூடிய மாநில மாணவர் அணி செயலாளர் CVMP.எழிலரசன், MLA அவர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள், மாநில இணைச் செயலாளர் S.மோகன் அவர்கள், மாநில துணைச் செயலாளர் கா.பொன்ராஜ் அவர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதியில் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞா.சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...