முதலமைச்சர் தலையிட்டு ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும் - சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை

கோபிசெட்டிபாளையம் பகுதியில் காலாவதியான ஆவின் பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது, ஆவின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்க்கிறது. நம்பி வாங்கும் பொது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் இது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று மே.28 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆவின் பாலகம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்துச் செல்லும் கொடிவேரி அணை பகுதியில் உள்ள ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களுக்கு, ஈரோடு மாவட்டம், சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஆவின் பிஸ்கட்டுகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

கொடிவேரி அணை ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களில், காலாவதியான பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக 'கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தின்' நிர்வாகிகளுக்கு தெரியவந்துள்ளது.

அதைத் தொடர்ந்து மாவட்ட உணவு கட்டுபாட்டு அலுவலர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு இணைய வழியில் விவசாய சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து பிஸ்கட்டுகளை ஏற்றி வந்த, TN43 D7390 ஆவின் வாகனத்தை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த வாகனத்திலிருந்து காலாவதியான பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதைத் தொடர்ந்து, சித்தோடு ஆவின் சேமிப்பு கிடங்கில் இருந்த காலாவதியான 6 டன் பிஸ்கட் பாக்கெட்டுகளை, பவுடர் பாயிண்ட் எனப்படும் இடத்திற்கு மாற்றிவிட்டு, சேமிப்பு கிடங்கில் புதிய பிஸ்கட் பாக்கெட்டுகளை வைக்கப்பட்டதாகவும், காலாவதியான பிஸ்கட்டுகள் அனுப்பப்பட்டது தெரியாமல் நடந்து விட்டது தவறு என்றும் ஆவின் நிர்வாகம் நாடகமாடி வருகிறது. இந்த தவறை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த, 'கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தினர்' குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு மக்களிடம் மிகவும் நல்ல பெயர் உள்ளது. ஆவின் விற்பனை செய்யும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களும், பிஸ்கட், இனிப்புகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களும் மிகவும் தரமானவை என்று மக்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனால், நம்பிக்கையுடன் ஆவின் பொருள்களை வாங்கி குழந்தைகளுக்கும் கொடுக்கின்றனர்.

கோபிசெட்டிபாளையம் பகுதியில் காலாவதியான ஆவின் பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது, ஆவின் மீதான மக்களின் நம்பிக்கையை தகர்க்கிறது. நம்பி வாங்கும் பொது மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம் இது.

இதுபோன்று செயல்களால் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய இழப்பைச் சந்திக்கும் நிலை உருவாகும். எனவே, காலாவதியான பிஸ்கட்டுகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது, ஆவின் நிர்வாகமும், பால்வளத்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, தவறு செய்த அதிகாரிகளை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டால் ஆவின் நிறுவனத்தை யாராலும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகும்.

அரசால் எந்தவொரு வணிக நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்த முடியாது என்ற அவப்பெயர் மக்கள் மனதில் நிலை பெற்று விடும். எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் தலையிட்டு, ஆவின் நிர்வாகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...