கோடை வெயில் வாட்டும் நிலையில் நீலகிரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துவருவதால் போக்குவரத்து மாற்றம்


தமிழகத்தில் சமவெளி பகுதிகளிலும் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலும் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வரும் நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். 

இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, குன்னூர் போன்ற பகுதிகளில் அதிகளவில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஒரு பகுதியை கடக்க பல மணிநேரம் ஆகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

இதனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல்துறை இதுவரை எந்த கோடைக் காலங்களிலும் இல்லாத அளவிற்கு வாகன கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. 

அதன்படி, கடந்த சனிக்கிழமை முதல் (ஏப்ரல் 8) வரும் மே 31ம் தேதி வரை கோவையிலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் காட்டேரி ஜங்ஷனிலிருந்து கேத்தி பாலடா வழியாக உதகைக்கும், கர்நாடகாவிலிருந்து கல்லட்டி வழியாக வரும் இலகுரக வாகனங்கள் தலைக்குந்தாவிலிருந்து புதுமந்து வழியாக உதகைக்கும், இதேபோல் கேரளாவிலிருந்து தலைக்குந்தா வழியாக வரும் இலகுரக வாகனங்கள் குலிச்சோலை வழியாக உதகைக்கு அனுமதிக்கப்படும்.

உள்ளூர் வாகனங்கள் தவிர்த்து வேறு எந்த வாகனங்களும் கல்லட்டி மலைபாதையில் அனுமதிக்கப்படமாட்டாது என்று நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளிரம்பா தெரிவித்துள்ளார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...