கோவையில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு முதல் போத்தனூர் ரயில் நிலையம் வரை சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு முதல் போத்தனூர் சாலை வரை சேதமடைந்த சாலைகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (28.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கும் இடங்களில் சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநகராட்சி ஆணையாளர், தெற்கு மண்டலத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவு முதல் போத்தனூர் ரயில் நிலையம் வரை உள்ள சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் சேதமடைந்த சாலைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு சாலை சீரமைக்கும் பணியினை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கரிமலை செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள், மின் ஒயர்களை சரி செய்யவும் மற்றும் மழைக்காலங்களில் பூங்கா வளாகத்தில் தேங்கும் மழை நீரை முழுமையாக வெளியேற்றிட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மத்தியமண்டலத்திற்குட்பட்ட சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர் சாலையில் மேட்டுப்பாளையம் சாலை முதல் தடாகம் சாலை வரை சுமார் 1.82 கி.மீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ள சாலை சீரமைக்கும் பணியினை ஆணையாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பணியினை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின்போது, மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், மாநகர துணை பொறியாளர் கருப்பசாமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பிரசன்னவெங்கடேசன், உதவி ஆணையர்கள் செந்தில்குமரன், சந்தியா, உதவி செயற்பொறியாளர்கள் கனகராஜ், பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன், சுகாதார ஆய்வாளர் சலைத், உதவி பொறியாளர்கள் சபரிராஜ், பர்மான் அலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...