பிள்ளையார்புரத்தில் 5000 மரக்கன்றுகள் நட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு பொதுமக்களுக்கு அழைப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி, பிள்ளையார்புரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளோம். இதில் விருப்பம் உள்ள பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் அண்மையில் வெளியிட்டுள்ள காணொளியில், மழைக்காலம் துவங்கியிருக்கிறது. இது, மரக்கன்றுகளை நடுவதற்கு நல்ல வாய்ப்பு. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட பிள்ளையார்புரம் பகுதியில் 27 ஏக்கர் நிலத்தில் மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். வனத்துறை அனுமதி பெற்று, நிலத்தை பண்படுத்தி வைத்துள்ளோம்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, வரும் ஜூன் 1ஆம் தேதி, பிள்ளையார்புரத்தில் 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளோம். பொதுமக்கள் பங்கேற்கலாம்.

வாய்ப்பு இருப்போர், மண்வெட்டி உள்ளிட்ட உபகரணங்களைக் கொண்டு வரலாம். இல்லாவிட்டாலும் இங்கேயே ஏற்பாடு செய்யப்படும். பசுமை காக்கும் முயற்சியில் கரம் கோர்க்க விரும்புவோர் இணையலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...