கோவை ஆர்.ஜி.நகரில் தொழிற்சாலை உரிமையாளர் தற்கொலை

துடைப்பம் தயாரிக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழிற்சாலை உரிமையாளர் ரவீந்திரன் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை, ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பா நகர், ஆர் ஜி.நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (43). இவர் துடைப்பம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். இதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எனவே, தொழிற்சாலையை மூடிவிட்டு துபாய்க்கு வேலைக்கு செல்வதற்காக முயற்சி செய்தார். இந்நிலையில் நேற்று மே.26 மாலை வீட்டில் ரவீந்திரன் எலியை ஒழிக்க பயன்படும் எலி மருந்து பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ஸ்ரீஜா, உடனடியாக அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

பின்னர் இது குறித்து ஸ்ரீஜா ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...