கோவை கிழக்கு மண்டலத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மழைநீர் வடிகால், குடிநீர் திட்டப் பணி, சாலை சீரமைக்கும் பணி உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெறும் இடத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (27.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-54 காமராஜர் சாலை இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் மத்திய பெரும் நிதி (CGF) திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் சுமார் 2.2 கி.மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருவதையும்,



மசக்காளிபாளையம் சாலை, லால் பகதூர் நகர், லட்சுமிபுரம் பகுதியில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24x7 குடிநீர் திட்டப் பணிகளையும் மற்றும்



பீளமேடு வார்டு எண்-24 தண்ணீர் பந்தல் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை சீரமைக்கும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாநகராட்சி வாகனம் மூலம் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றும் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையாளர் கவிதா, மாநகர துணை பொறியாளர் கருப்புசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...