கொங்கு மண்டலத்தில் அடுத்த ஒருவாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அடுத்த ஒருவாரம் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வலுப்பெற்று நல்ல மழையை கொடுக்கும் என்று கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


கோவை: மழை குறித்தும், வரவுள்ள பருவமழை குறித்தும் அண்மையில் கோவை வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் இன்று (25.4.2024) முதல் மழையின் அளவு படிப்படியாக குறையும். கொங்கு மண்டலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் ஆங்காங்கே மிதமான வெப்ப சலனம் மழைக்கு அடுத்த ஒரு வாரம் வாய்ப்புள்ளது.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது என்று இந்த மாத இறுதியில் அறிவித்தாலும் உண்மையில் மழை அடுத்த 10 நாட்களுக்கு அவ்வளவாக இருக்காது. இதற்குக் காரணம் எம் ஜே ஓ வங்கக் கடலிலிருந்து பசிபிக் கடலை நோக்கி நகர்வதால் இந்திய நிலப்பரப்பில் மழையின் தாக்கம் குறைவாக காணப்படும்.

இதனால் தென்மேற்கு பருவமழை பொய்த்து விடும் என்று நம்ப வேண்டாம். சற்று தாமதமாக ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் வலுப்பெற்று நல்ல மழையை கொடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...