கோவை தெற்கு மண்டலம் 94வது வார்டுக்குட்பட்ட சுந்தராபுரம், மாச்சம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பூங்காவின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகர்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், அப்பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.

மேலும், அப்பகுதியில் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபடுவதையும், கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொதுமக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, நகர் நல அலுவலர் சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.