பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது குறித்து பெண்கள் மட்டுமே பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

கோவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெண்கள் மட்டுமே பங்கேற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் இருசக்கர வாகனங்களுடன் கலந்து கொண்டனர். 



கோவையில் ஏ.எஸ்.கே என்ற என்ற தொண்டு நிறுவனம் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



இந்த விழிப்புணர்வு பேரணியை கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த பேரணியானது கோவை வ.உ.சி மைதானத்தில் இருந்து ஆனைகட்டி வரை சுமார் 40 கி.மீ தூரம் வரை நடைபெறுகின்றது. 



பெண்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த இருசக்கர வாகன பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். 



இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்து பேட்டியளித்த காவல்துறை கண்காணிப்பாளர் ரம்யா பாரதி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல் துறையால் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இருசக்கர பேரணி செல்லும் வழியில் உள்ள கிராமங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் ஆனைகட்டியில் உள்ள மலைவாழ் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...