கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் யானை தாக்கி காவலாளி பலி

வனத்தில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றைக் காட்டு யானை திடீரென பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ளே நுழைந்தது. அப்போது விரட்ட முயன்ற காவலாளி சண்முகத்தை அந்த யானை, துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கு மலை தொடர்ச்சி பகுதியை ஒட்டியவாறு உள்ளது. பல்கலைக்கழகத்தின் பின்புறத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவது உண்டு.

இந்த நிலையில் இன்று மே.23 அதிகாலை வனத்தில் இருந்து வெளியேறிய 13 யானைகள் சோமவம்பாளையம் அருகே உள்ள வடவள்ளி போலீஸ் நிலையத்தின் அருகே நின்று கொண்டு இருந்தன. தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை வனப்பகுதியை நோக்கி விரட்டினர்.

அந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றைக் காட்டு யானை திடீரென பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ளே நுழைந்தது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய கேன்டீன் அருகே யானை முகாமிட்டு இருந்தது. இதை கண்ட ஊழியர்கள் யானை இருப்பதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகளிடம் தெரிவித்தனர்.

அப்போது காலை 10 மணி அளவில் காவலர்கள் சுரேஷ், சண்முகம், ஹரி ஆகியோர் யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்கிருந்து நகராமல் சத்தம் போட்டது. ஆவேசம் அடைந்த யானை காவலர்களை துரத்தியது. 3 காவலர்களும் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினர்.

இதில் சண்முகம் (வயது 57) என்ற காவலரை யானை துதிக்கையால் தூக்கி வீசியது. அதில் பலத்த காயம் அடைந்த சண்முகத்தை அங்குள்ள ஊழியர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பலியான சண்முகத்துக்கு சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் ஆகும். முன்னாள் ராணுவ வீரரான இவர், கோவை ஐ.ஓ.பி. காலனியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். யானை தாக்கியதில் சரவணன் என்ற காவலர் சிறு காயத்துடன் தப்பினார். பட்டப்பகலில் யானை தாக்கி காவலாளி உயிரிழந்த சம்பவம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் யானை நீண்ட நேரமாக பல்கலைக்கழகத்திலேயே முகாமிட்டு இருந்தது. அதனை அங்கிருந்து துரத்த வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...