திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை பகுதியாக ரத்து

காட்பாடி-சித்தூர் கோட்டத்தில் பொறியியல் பராமரிப்பு பணியால் திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை மே 27, 29, 30 தேதிகளில் பகுதியாக ரத்து.


கோவை: காட்பாடி-சித்தூர் கோட்டத்தில் காட்பாடியை அடுத்துள்ள பொம்மசமுத்திரம் ரயில் நிலையத்தில் புதிய லூப் லைன் அமைக்கும் வகையில் பொறியியல் பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே துறை நேற்று (22.5.2024) அறிவித்துள்ளது. இதனால் திருப்பதி - கோவை விரைவு ரயில் சேவை பகுதி ரத்து செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி ரயில் எண்.22615 திருப்பதி - கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் 27.05.2024, 29.05.2024 & 30.05.2024 திருப்பதி - காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு ரயில் இயக்கப்படாது; இது காட்பாடியில் இருந்து புறப்பட்டு, மேற்குறிப்பிட்ட தேதிகளில் கோவை வரை இயக்கப்படும்.

மேலும் (28.05.2024 & 30.05.2024) அன்று திரும்பும் கோயம்புத்தூர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் (எண்.22616) காட்பாடி திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டுமே ரயில் இயக்கப்படும்; மேற்குறிப்பிட்ட தேதிகளில் காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...