சமூக சேவையில் தனியார் பெரு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றன. அதன்படி கோவை மாநகராட்சியுடன் இணைந்து சோசியல் கேபிட்டல், டாய்லட் ஃபர்ஸ்ட், நோ டம்பிங், நோ ஃபுட் வேஸ்ட், மை ஷாப்பிங் மை பேக், கோயம்புத்தூர் க்ளைமேட் ஜேஞ், ட்ரீ ட்ரேன்ஸ்பிளேஷன், டாக்டர்.கலாம் லைப்ரரி, ஸ்வச் பாரத் ஸ்வச் வித்யாலயா உள்ளிட்டவை இணைந்து கடந்த வருடம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தின.

இத்திட்டங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், தற்போது 2017 வருடத்தில் மேற்கொள்ள வேண்டிய சமூகப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவையில் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், ரூட்ஸ் குழுமத்தின் இயக்குநர் ராமசாமி, சிஎஸ்ஆர் தலைவர்கள் எல்எம்டபில்யு-வின் நடராஜ், சிஆர்ஐ பம்ஸ்-யின் ராஜா மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்ற தன்னார்வ தொண்ட நிறுவனத்தினர், கோவை மாநகரத்தில் செயல்படுத்தி வரும் சமூகப் பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறினர். மேலும், திறந்தவெளிக் கழிப்பிடங்களை முற்றிலும் தடுக்க திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் குழுமம் சார்பில் கிரடாய் அமைப்புடன் இணைந்து 50 கழிப்பிடம் கட்டித்தருவாக உறுதியளிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்நிகழ்வில், ஸ்வச் பாரத் பணியில் பங்கேற்று தங்களது முழு சேவையையும் வழங்கிவரும் உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் தனியார் பெரு நிறுவனங்களும், மாநகராட்சியும் மட்டுமின்றி வங்கிகள், சமூக ஆர்வலர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

இத்திட்டங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், தற்போது 2017 வருடத்தில் மேற்கொள்ள வேண்டிய சமூகப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவையில் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், ரூட்ஸ் குழுமத்தின் இயக்குநர் ராமசாமி, சிஎஸ்ஆர் தலைவர்கள் எல்எம்டபில்யு-வின் நடராஜ், சிஆர்ஐ பம்ஸ்-யின் ராஜா மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்ற தன்னார்வ தொண்ட நிறுவனத்தினர், கோவை மாநகரத்தில் செயல்படுத்தி வரும் சமூகப் பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறினர். மேலும், திறந்தவெளிக் கழிப்பிடங்களை முற்றிலும் தடுக்க திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் குழுமம் சார்பில் கிரடாய் அமைப்புடன் இணைந்து 50 கழிப்பிடம் கட்டித்தருவாக உறுதியளிக்கப்பட்டது.
தொடர்ந்து இந்நிகழ்வில், ஸ்வச் பாரத் பணியில் பங்கேற்று தங்களது முழு சேவையையும் வழங்கிவரும் உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இக்கூட்டத்தில் தனியார் பெரு நிறுவனங்களும், மாநகராட்சியும் மட்டுமின்றி வங்கிகள், சமூக ஆர்வலர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.