கோவையில் கனமழையால் போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் திணறல்

கோவையில் நேற்று கனமழையால் உக்கடம், மற்றும் சுங்கம் பைபாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் திணறினர்.


கோவை: கோவையில் நேற்று (மே.18) 2 மணி நேரத்திற்கு தொடர்ந்து பெய்த கனமழையால் கோவையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சாலைகளில் நீர் தேங்கியது. இந்த நிலையில் மழை ஓய்ந்த சற்று நேரத்தில் கோவை மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திணறி வருகிறார்கள்.



குறிப்பாக உக்கடம், மற்றும் உக்கடம் முதல் பாலக்காடு செல்லும் சாலை, சுங்கம் பைபாஸ் செல்லும் சாலை போன்ற இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து செல்கிறது. மேலும் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், திருச்சி சாலை, அவிநாசி சாலை, உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து ஊர்ந்து செல்வதை காண முடிந்தது.



இதனால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும், வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள் என பலரும் பேருந்திற்கு காத்திருக்கும் நிலையை எதிர்கொள்வதற்கு நீண்ட நேரம் காத்திருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...