மாணவர்கள் தாக்கியதில் செல்போன் திருடியவர் பலி- இரண்டு மாணவர்கள் கைது

கோவை சரவணம்பட்டியை அடுத்த வையாபுரி நகரில் செல்போனை திருடிக்கொண்டு ஓடிய மைக்கேல் என்ற நபரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி வையாபுரி நகர் பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சிலர் அடுக்குமாடி குடியிருப்பில் அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த இளைஞர் ஒருவர் செல்போனை திருடிக்கொண்டு ஓடியுள்ளார். இதை பார்த்த மாணவர்கள் அவரை விரட்டியதில், மாடியில் இருந்து செல்போன் திருடிய இளைஞர் குதித்துள்ளார். இதில் காயமடைந்த அவரை பிடித்து தாக்கிய மாணவர்கள், அவரிடம் விசாரித்த போது செல்போனை திருடியவர் பெயர் நாகர்கோவிலை சேர்ந்த மைக்கேல் லிபர்டி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மாணவர்கள் செல்போன் திருடிய மைக்கேல் லிபர்டி வீட்டிற்கு போன் செய்து தகவல் தெரிவித்ததுடன், மீண்டும் அவரை தாக்கி அதே இடத்தில் போட்டு விட்டு கல்லூரிக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் காயங்களுடன் கிடந்த மைக்கேல் லிபர்டியை அப்பகுதி மக்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகமரணம் என வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் மைக்கேல் லிபர்டியின் உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுமதித்தனர். 

இந்நிலையில் இன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த மைக்கேலின் உறவினர்கள், நண்பரை பார்ப்பதற்காக மைக்கேல் கோவை வந்ததாகவும், அறையில் தங்கி இருக்கும் மாணவர்கள் அவரை தாக்கியதில் உயிரிழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.

எனவே இந்த வழக்கை சந்தேக மரணமாக பதியாமல் கொலை வழக்காக பதிய வேண்டும் எனவும் அப்போதுதான் உடலை பெற்றுச்செல்வோம் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கோவில்பாளையம் காவல் துறையினர் இதை கொலை வழக்காக மாற்றம் செய்ததுடன் சபரி, அந்தோணி என்ற பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...