பாப்பநாயக்கன்பாளையத்தில் இரவு நேரத்தில் தோட்டத்தில் புகுந்து உணவு தேடிய ஒற்றை காட்டு யானை – சிசிடிவி வெளியீடு

வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய ஒற்றை காட்டுயானை, பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள குணசேகரன் என்பவரது தோட்டத்தில் புகுந்து உணவு ஏதாவது இருக்கிறதா? என்ற தேடும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, குணசேகரன் என்பவரது தோட்டத்தில் புகுந்து அவரது வீட்டை சுற்றிச் சுற்றி உணவு தேடியது. மேலும் அங்கு நிறுத்தியிருந்த டிராக்டரிலும் உணவு தேடிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியாக ஆனைகட்டி மலைப் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது உணவு தேடி மலை அடிவாரப் பகுதிகளாக மாங்கரை, வீரபாண்டி, தடாகம், பாப்பநாயக்கன்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.



இந்த நிலையில் நேற்று இரவு 12 மணியளவில் துடியலூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை உணவு தேடி அங்கிருந்த குணசேகரன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது. காட்டு யானையை பார்த்ததும் அங்கிருந்த நாய்கள் குரைக்கத் தொடங்கின. அப்போது அந்த யானை வீட்டைச் சுற்றி சுற்றி உணவு தேடியது. அங்கு இருந்த அரிசி மூட்டையை தூக்கி வீசி அதைத் திண்று சேதப்படுத்தியுள்ளது. மேலும் அங்கு நிறுத்தியிருந்த டிராக்டரிலும் ஏதாவது உணவு இருக்குமா என தேடியது.

உணவு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து சென்று விட்டது. சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது காட்டு யானை இருப்பதை கண்டு வீட்டினுள்ளேயே இருந்துவிட்டனர். இது அங்கு பொருத்தியிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. தற்போது இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது. உயிர்சேதம் ஏற்படும் முன் காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...