கோவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலரவனுக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன் இல்லத்திற்கு சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


கோவை: கோவை மாநகராட்சி முன்னாள் மேயராக பதவி வகித்து வந்தவர் தா.மலரவன். இவர் 2001–2006 காலகட்டத்தில் கோவை மாநகராட்சி அ.தி.மு.க. மேயராக இருந்தார். 2006 முதல் 2016 வரை 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இந்த நிலையில் தா.மலரவன் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் இன்று (17-05-2024) காலை 11 மணியளவில் கணபதியில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது மரணம் அடைந்தார்.

இதைத்தொடர்ந்து கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தா.மலரவன் இல்லத்திற்கு இன்று (மே.17) சென்று, அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார். மேலும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்தனை செய்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...