கோவையில் பன்னடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு

ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் உள்ள பன்னடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடம் மற்றும் முருகன் காலனியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில் உள்ள பன்னடுக்கு நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தினை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (17.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத்தொடர்ந்து, மேற்கு மண்டலம் வார்டு எண்.16க்குட்பட்ட முருகன் காலனியில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக, அவிநாசி மேம்பாலம் கீழ் பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்காக சென்னையிலிருந்து கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் உள்ள சுமார் 100 HP திறன் கொண்ட 2 எண்ணிக்கையிலான இராட்சத டீசல் மோட்டார்களை மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, உதவி ஆணையர்கள் சந்தியா(மேற்கு), இளங்கோவன்(பொ) (தெற்கு), உதவி செயற்பொறியாளர் சவிதா, உதவி நகரமைப்பு அலுவலர் காந்திமதி, உதவி பொறியாளர்கள் கமலக்கண்ணன், விமல்ராஜ், ராஜேஸ்வேணுகோபால், மண்டல சுகாதார அலுவலர் ராமச்சந்தின் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...