கார் வாடிக்கையாளருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

பணம் செலுத்தி 5 நாள்களில் கார் விநியோகம் செய்வதாகக் கூறி, 4 மாதங்களாக காரை வழங்காததால், ஆதி கார் பிரைவேட் லிமிடெட் என்ற கார் விற்பனை நிலைய நிர்வாகம் ரூ.2 லட்சம், கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் சாகுல் ஹமீது என்பவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது (40). இவர், சரவணம்பட்டியில் உள்ள ஆதி கார் பிரைவேட் லிமிடெட் கார் விற்பனை நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் வாங்க கடந்த 2022 மே மாதம் முன்பதிவு செய்தார். இதற்கு தனியார் வங்கிக் கடன் மூலமாக முழுத் தொகையும் சம்பந்தப்பட்ட கார் விற்பனை நிலைய நிர்வாகத்துக்கு காசோலையாக தரப்பட்டது.

முழுத்தொகை பெற்றுக் கொண்ட பிறகும், அந்த நிர்வாகம் சாகுல் ஹமீதுக்கு காரை வழங்காமல் அலைக்கழித்து வந்தது. இது குறித்து, சரவணம்பட்டி காவல் நிலையம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றத்தில் சாகுல் ஹமீது புகார் அளித்தார். இதற்கிடையே பணம் செலுத்தி 4 மாதங்கள் கழித்து கார் விற்பனை நிலைய நிறுவனம் காரை, சாகுல் ஹமீதுக்கு வழங்கியது.

இதைத் தொடர்ந்து, காருக்கு முழுத்தொகை செலுத்தப்பட்டு வங்கிக்கு 4 மாதத் தவணைகள் செலுத்தப்பட்ட பிறகு காரை வழங்கியதால் வருமான இழப்பு, மன உளைச்சல் உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட்டதாகவும், இதற்கு உரிய நிவாரணம் வழங் கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை நுகர் வோர் நீதிமன்றத்தில் சாகுல் ஹமீது புகார் அளித்தார்.

கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குகள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், இந்த வழக்கு நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் மே 7-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில், பணம் செலுத்தி 5 நாள்களில் கார் விநியோகம் செய்வதாகக் கூறி, 4 மாதங்க ளாக காரை வழங்காததால், ஆதி கார் பிரைவேட் லிமிடெட் கார் விற்பனை நிலைய நிர்வாகம் ரூ.2 லட்சம், கார் தயாரிப்பு நிறுவனமான புது தில்லியில் தலைமை அலுவலகம் வைத்துள்ள மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.4 லட்சம் சாகுல் ஹமீதுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் சாகுல் ஹமீது தரப்பில் வழக்குரைஞர்கள் வி.ராஜசேகர், கே.எஸ்.ஐஸ் வர்யா ஆகியோர் ஆஜராகினர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...