உடுமலையில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை - அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

பாதிக்கப்பட்ட சிறுமைகளை விசாரித்து யாரேனும் தொடர்பு இருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டும். இதுவரையிலும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உடுமலைப் பகுதிக்கு வந்து விசாரிக்கவில்லை என்று அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க துணை செயலாளர் சுகந்தி புகார் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இரண்டு சிறுமிகளை பலாத்காரம் செய்தது தொடர்பாக கடந்த 12-ம் தேதி மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.



அதைத் தொடர்ந்து இன்று அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம், ஜீவிகா அமைப்பு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.



அப்போது அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் துணை செயலாளர் சுகந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது, உடுமலையில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் சிறுவர்கள் ஈடுபட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

போதை வஸ்துக்கள் பள்ளி கல்லூரிகள் பகுதியில் விற்பனை செய்வதால் சிறார்கள், இளைஞர்கள் மிக அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனால் போதை வஸ்துக்களை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட உடுமலை தங்கும் விடுதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி சாட்சிகளை பலப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமைகளை விசாரித்து யாரேனும் தொடர்பு இருந்தால் அவர்களையும் கைது செய்ய வேண்டும். இதுவரையிலும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் உடுமலைப் பகுதிக்கு வந்து விசாரிக்கவில்லை.

அவர்கள் சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டு காவல்துறைக்கு அறிக்கை அளிக்க வேண்டும். வழக்கை ஆறு மாத காலத்திற்குள் விரைவாக விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் பிணையில் வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள். எனவே அவர்கள் பிணையில் வராமல் காவல்துறையினர் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் இது குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுதிகள், பள்ளிகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குழந்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவர்கள் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். பாலின சமத்துவம் குறித்த பாடத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைச் செயலாளர் சுகந்தி, மாநில பொதுச் செயலாளர் ராதிகா, மாவட்டச் செயலாளர் சரஸ்வதி, மாவட்ட தலைவர் பவித்ரா, மாநில குழு உறுப்பினர் பானுமதி, மாதர் சங்க மாநில நிர்வாகிகள் கிரிஜா, இந்திரா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் தாராபுரம் கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...