கவுண்டம்பாளையம் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

நீதிமன்ற உத்தரவை கொடுக்க சென்ற கவுண்டம்பாளையம் போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாதவன் என்பவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள பூச்சியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 46). இவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று (மே.14) சாய்பாபா காலனி பகுதியில் ஒரு குற்றவாளிக்கு நீதிமன்ற உத்தரவை (வாரண்ட்) கொடுக்க சென்றார். அப்போது அந்த ஆசாமி ஏட்டு ராஜேந்திரனையும், மற்றொரு போலீஸ்காரரையும் தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர், இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கவுண்டம்பாளையம், இந்திரா நகரை சேர்ந்த மாதவன் என்ற தக்காளி மாதவன் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.இவர் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...