நெல்லில் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணங்களின் ஆராய்ச்சிக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு நிதியுதவி

ஊட்டச்சத்துக் குறைபாடு, பெண்கள் மற்றும இளம் வயது சிறுவகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியை பாதிக்கவல்லது. நமது நாட்டில் ஏறத்தாழ 56.2 சதவிகித பெண்கள் இரத்தசோகை குறைபாடுடனும் மற்றும் 0-3 வயதுள்ள குழந்தைகளில் 45 சதவீதம் சராசரிக்கும் குறைவான எடையையும் கொண்டுள்ளனர்.

இந்த குறைபாடுகளை தீர்க்கவல்ல சத்து மாத்திரைகள் மற்றும் சிறப்பு உணவுக்கான செலவு அதிகமாதலால், கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வாழும் ஏழை குடும்பத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலனுக்கு அது ஒரு எட்டாக்கனியாக உள்ளது.

நெல் போன்ற பிரதானப் பயிர்களில் மரபியல் மேம்படுத்தல் முறையில் ஊட்டச்சத்துக்களை செறிவுபடுத்துவதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.

இந்திய அரசாங்கத்தின் உயிர் தொழில் நுட்ப தொழிற்சாலை ஆராய்ச்சி உதவிகுழுமம், “குழந்தைகளின் உடல் நலம் காத்தல் என்ற ஒரு திட்டத்தினை அமெரிக்காவின் பில்கேட்ஸ் நிறுவனம், வெல்கம் டிரஸ்ட் மற்றும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து மருந்துகள் மற்றும் வேளாண் பொருட்களின் மூலம் போக்கிடும் திட்டத்தினை செயல்படுத்துகின்றது. 

இந்த திட்டத்தின் கீழ், கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த தாவர மூலக்கூறுவியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் மையமும், மதுரை மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவ துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலனை ஊட்டச்சத்து மற்றும் மருத்துவக் குணமிக்க நெல்லின் மூலம் பேணுவதற்காக வரைந்த ஒரு திட்டம் 1.5 கோடி நிதியுதவியுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் உயர்விளைச்சல் மற்றும் மருத்துவக் குணமிக்க நெல்லில் உள்ள முக்கிய குணாதிசயங்களான ஃப்ளாவனாய்டுகள், லியூட்டின், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகச் சத்துக்களின் உயிர்நிலைப்புத்தன்மை மற்றும் சர்க்கரை நோயை எதிர்க்கவல்ல குறியீடுகளை ஆராய்ச்சி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...