நெடுஞ்சாலைப் பணிகளை தனியாருக்கு வழங்கியதைக் கண்டித்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கு ஊதி சாவு மணியடித்து போராட்டம்

தமிழக நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதைக் கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோவையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் சங்கு ஊதி சாவு மணியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சாலை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு தனியாரிடம் வழங்குவதை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவித்து பணப்பலன் வழங்குதல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலைப்பணியாளர்கள் சங்கு ஊதி சாவு மணி அடிக்கும் நூதன போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை- திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பாக சங்கு ஊதி சாவு மணி அடிக்கும் நூதன போராட்டம் நடத்தினர். பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு சாலையை பராமரிக்க 1300 கோடி ரூபாயினை எஸ்.பி.கே என்ற தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் ஒதுங்கி இருப்பதாகவும், அரசே இந்த பணிய நடத்தினால் 300 கோடி மட்டுமே செலவாகும் எனவும், தனியார் நிறுவனம் 1000 கோடி ரூபாய் லாபம்பார்க்கும் வகையில் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் சாலை பணியாளர்கள் கூறினர்.

மேலும், சாலைபணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக கருத வேண்டும். சாலைபணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு பதவி உயர்வுவழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்திய அவர்கள், இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...