ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழா கொண்டாட்டம்

சர்வதேச செவிலியர் தின விழாவை முன்னிட்டு, செவிலியர் துறையில் 25 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து சேவையாற்றிய செவிலியர்களுக்கு, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். G.மனோகரன் சாதனையாளர் விருது வழங்கினார்.


கோவை: மருத்துவ துறையின் முதுகெலும்பாக, அன்றாடும் தங்களது உழைப்பை ஈடுஇணையற்ற சேவையாக வழங்கி வரும் செவிலியர்களை பாராட்டி கௌரவிக்கும் வண்ணம் ஆண்டுதோறும் மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர் தினம் அனுசரிக்கப்படுகின்றது. இந்த வருடம், ஜி.கே.என்.எம் மருத்துவமனையில், சர்வதேச செவிலியர் தின விழா, மே 11 ஆம் தேதியான இன்று சிறப்பாக கொண்டப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, செவிலியர் துறையில் 25 வருடங்களுக்கும் மேல் தொடர்ந்து பணியாற்றி சேவையாற்றிய செவிலியர்களுக்கு, சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். G.மனோகரன் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்த ஆண்டின் செவிலியர் தின, ஆய்வுப்பொருளான, 'எங்கள் "செவிலியர்கள் எங்கள் எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி" என்பது பற்றி பேசிய டாக்டர் G.மனோகரன், மருத்துவத்துறையின் எதிர்காலம் செவிலியர்களை சிறப்பாக பயன்படுத்துவதில் தான் உள்ளது என்று குறிப்பிட்டார்.



இந்த ஆண்டின் விழாவையொட்டி, முன்னதாகவே, செவிலியர்கள் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு போட்டிகளின் வெற்றியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மருத்துவமனையின் மருத்துவர்கள், நிர்வாகிகள் என அனைவரும் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து ஊக்குவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...