உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் ஜூன் மாதம் திறக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நம்பிக்கை

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க உக்கடம் மேம்பாலம் திட்டம் அறிவிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக உக்கடத்தில் இருந்து கரும்புகடை வரை இணைப்பு இருந்தது. மேம்பாலம் திட்டத்தை நீட்டிக்க முன்மொழியப்பட்டதை அடுத்து, பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளுடன் இணைக்கப்பட்டு கரும்புக்கடையிலிருந்து ஆத்துப்பாலம் வரை நீட்டிக்கப்பட்டது.

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் 92% பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், ஜூன் மாத இறுதிக்குள் சோதனை ஓட்டத்திற்காக மேம்பாலம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில் சாலைகளில் ஏற்கனவே விரிசல் காணப்பட்ட நிலையில், சேலம் கோட்டத்தைச் சேர்ந்த மாநில நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் அண்மையில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர்.

அவர்கள் வருகையின் போது ஆத்துப்பாலத்தை செல்வபுரம் புறவழிச்சாலையுடன் இணைக்கும் சாலையின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கோயம்புத்தூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் மற்றும் அவரது குழுவினரால் இப்பிரச்னையை சரி செய்ய ஒப்பந்ததாரருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆய்வு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...