உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் ஜூன் மாதம் திறக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நம்பிக்கை

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை போக்குவரத்து நெரிசலை குறைக்க உக்கடம் மேம்பாலம் திட்டம் அறிவிக்கப்பட்டு 2018-ம் ஆண்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. முதல் கட்டமாக உக்கடத்தில் இருந்து கரும்புகடை வரை இணைப்பு இருந்தது. மேம்பாலம் திட்டத்தை நீட்டிக்க முன்மொழியப்பட்டதை அடுத்து, பொள்ளாச்சி, பாலக்காடு சாலைகளுடன் இணைக்கப்பட்டு கரும்புக்கடையிலிருந்து ஆத்துப்பாலம் வரை நீட்டிக்கப்பட்டது.

உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலத்தின் 92% பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், ஜூன் மாத இறுதிக்குள் சோதனை ஓட்டத்திற்காக மேம்பாலம் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. இந்த நிலையில் சாலைகளில் ஏற்கனவே விரிசல் காணப்பட்ட நிலையில், சேலம் கோட்டத்தைச் சேர்ந்த மாநில நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் அண்மையில் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தனர்.

அவர்கள் வருகையின் போது ஆத்துப்பாலத்தை செல்வபுரம் புறவழிச்சாலையுடன் இணைக்கும் சாலையின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கோயம்புத்தூர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் மற்றும் அவரது குழுவினரால் இப்பிரச்னையை சரி செய்ய ஒப்பந்ததாரருக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஆய்வு குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பணிகள் முடிந்து அடுத்த மாதம் (ஜூன்) திறக்கப்படும் என மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...