மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு

பில்லூர் அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்த தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, அணை தூர்வாரும் பணியினை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மட்டுமின்றி திருப்பூர் மாவட்ட மக்களின் தாகத்தை தணிப்பதில் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள பில்லூர் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையை நீர் ஆதாரமாக இந்த அணை கொண்டுள்ளது. தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக இந்த அணை வறண்டு காணப்படுகிறது.

100 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 60 அடிக்கு மேல் சகதி நிரம்பி காணப்படுகிறது. இந்த அணையை தூர்வார வேண்டும் என்று கோவை மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.



இந்த நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் பில்லூர் அணையினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அவர்கள் நேற்று (மே.10) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.



மேலும், அணையினை தூர்வாருதல் பணியினை துரிதப்படுத்தி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொ) பிரேம்குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் செல்லமுத்து, கோவை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், கோவை மாநகராட்சி தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் இருந்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...