போக்குவரத்துக்கு இடையூறில்லா பேருந்து நிறுத்தம் : கோவை மாநகர போக்குவரத்து போலீசாரின் புதிய முயற்சி

வீட்டில் இருந்து புறப்பட்டும் வாகன ஓட்டிகள், செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைவதற்குள் கோவை மாநகரின் ‘டிராபிக்’-களுக்குள் சிக்கித்தவிப்பது வாடிக்கையாகிவிட்டது. சென்னைக்கு அடுத்தபடியாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறிவரும் கோவையில் நெருக்கடிகளை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி, ‘பஸ்-பே’ என்ற திட்டத்தை போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். மாநகர பேருந்துகள் ஆங்காங்கே உள்ள பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் போது பின்னால் வரும் வாகனங்கள் சாலைகளில் தேங்கி நிற்பதை தவிர்க்கவும், மற்ற வாகனங்களுக்கு இடையூறில்லாமல் பேருந்துகள் நிற்க வழிவகை செய்வதுமே இந்த ‘பஸ்-பே’ திட்டத்தின் நோக்கம்.

இது குறித்து கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதவாது :- 

கோவையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதன் முதல் படியாக அவினாசி சாலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘க்ரீன் காரிடார்’ திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

வாகன ஓட்டிகள் அவினாசி சாலையில் 40 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்போது சாலைகளில் உள்ள சிக்னல்களில் மாட்டிக்கொள்ளாமல் பயணிகப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் ‘க்ரீன் காரிடார்’. தற்போது தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களோடு, காவல் துறை இணைந்து இத்திட்டத்தை மேம்படுத்தி வருகிறோம். 



பஸ்-பே

பேருந்து நிறுத்தங்களில் நிறுத்தப்படும் பேருந்துகள் பெரும்பாலும் சாலையோரம் நிற்பதில்லை. பயணிகள் நிழற்குடையின் கீழ் நிற்காமல் சாலைகளில் நிற்பதும் இதற்கு ஒரு காரணம். இவ்வாறு பேருந்துகள் சாலையோரம் நிறுத்தாமல் வழித்தடத்தில் நிறுத்தப்படுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மேலும், சிக்னல்களை தொடர்ந்து, வரும் பேருந்து நிறுத்தங்களால் அதிகமான போக்குவரத்து நெரிசலை வாகன ஓட்டிகள் சந்திக்க வேண்டியுள்ளது. 

அதனால், பேருந்துகள் நிற்க சாலையோரம் ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. இரவு நேரங்களிலும் பேருந்து சரியான இடத்தில் வந்து நிற்க, பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்பு சுவர்களில் மின்னும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கும். இதுவே இந்த ‘பஸ்-பே’ திட்டம். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள 10 இடங்களை தேர்வு செய்தோம். அவினாசி சாலையில் லட்சுமி மில்ஸ் சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலையில் சிந்தாமணி சந்திப்பு மற்றும் எம்.ஜி.ஆர். மார்க்கெட், சிவாலயா சந்திப்பு, சுந்தராபுரம், கோவைப்புதூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட 8  இடங்களில் ‘பஸ்-பே’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கொடுக்கும் ஒத்துழைப்பை தொடர்ந்து மேலும் பல இடங்களில் இத்திட்டம் நடைமுறைபடுத்தப்படும். 

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவிக்கலாம். அவ்வாறு பொதுமக்கள் கொடுக்கும் நல்ல ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, இதுபோன்ற திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...