ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட டிரைவர் கைது

கோவை போலீசார் போத்தனூர் மேம்பாலத்தில் வாகன சோதனையின் போது ரேஷன் அரிசி கடத்த முயன்ற கேரள டிரைவர் தமிழ்செல்வனை கைது செய்தனர்.


Coimbatore: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை ஐ.ஜி. ஜோசி நிர்மல் குமார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், கோவை மண்டல போலீசார் சந்திரசேகரன் மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையின் போலீசார், 09-05-2024 ஆம் தேதியில் செட்டிபாளையம் ரோடு போத்தனூர் மேம்பாலத்தில் வாகன சோதனை நடத்தினர்.


சோதனையின் போது கேரள பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தை நிறுத்தி, 30 கிலோ ரேஷன் அரிசியை கடத்தல் முயற்சியில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைதான டிரைவர் கேரளாவின் மூங்கில் மடையை சேர்ந்த தமிழ்செல்வன்(45) என்பவர் என தெரியவந்தது.


Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...