கஞ்சா வழக்கு விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை மதுரை அழைத்து சென்ற தேனி போலீசார்

கஞ்சா வழக்கு தொடர்பாக மதுரையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று காலை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.


கோவை: யூடியூப்பர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 4-ம் தேதி சவுக்கு சங்கரை தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டியில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து தேனி போலீசார் நேற்று (07-05-2024) அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மதுரையில் உள்ள போதைப் பொருள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தேனி போலீசார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கரை இன்று (08-05-2024) காலை போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.

ஏற்கனவே அவர் தேனியில் இருந்து கைது செய்யப்பட்டு கோவை அழைத்து வந்தபோது திருப்பூர் அருக விபத்தில் சிக்கினார். எனவே இந்த முறை விபத்தில் வேன் சிக்காத வகையில் பலமுறை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு போலீஸ் வாகனம் சவுக்கு சங்கரை மதுரை அழைத்து சென்றது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...