கோவையில் காவலர்களின் குழந்தைகளுக்கான WET CLAY பயிற்சி வகுப்பு துவங்கியது

கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில், காவலர்களின் குழந்தைகளுக்கான WET CLAY பயிற்சி வகுப்புகள் கோவை மாநகர் காவல் அலுவலக கலந்தாய்வு கூடத்தில் இன்று துவங்கின. 6 நாட்களில் சுத்தம், தன்னம்பிக்கை போன்றவை கற்பிக்கப்படும்.


கோவை: கோவையில் மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவலர்களின் குழந்தைகளுக்கான 6 DAYS WET CLAY பயிற்சி வகுப்பு துவங்கியது.



இத்திட்டம் மே 8, 11, 13, 15, மற்றும் 17 ஆகிய நாட்களில் நடைபெறும். இந்த பயிற்சியில் காவலர் குடும்பத்தை சார்ந்த குழந்தைகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் 102 மாணவ/மாணவிகள் கலந்து கொண்டனர்.



இந்த பயிற்சி வகுப்பில் SPIEGEL TRAINING AND FOUNDATION நிறுவனர் சத்தியமூர்த்தி சீரிய பயிற்சிகளை நடத்துகிறார். இப்பயிற்சிகளில் சுத்தம், தன்னம்பிக்கை, சுய மதிப்பு, சுய ஒழுக்கம், உணவு வழக்க வழக்கங்கள், மற்றும் தனித்திறமையை கண்டறிதல் ஆகியவை பயிற்சியாக வழங்கப்படுகின்றன.

இதுபற்றி பேசிய பாலகிருஷ்ணன் மாணவ/மாணவிகளை தங்களது ஓய்வு நேரத்தில் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும் என்றும், தங்களது முடிவுகள் தங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் கோவை மாநகர் ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் சேகரும் பங்கேற்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...