திமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்களுக்கு நன்றி கூறிய கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

மக்களவை தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் என அனைவரையும் வரவேற்று, கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியம் சார்பில், ஒன்றிய கழக செயலாளர் C.M.கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில், தடாகம் சாலையில் உள்ள சி.எம்.கே ஹாலில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரையும் வரவேற்று, கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் இன்று (மே.4) சந்தித்து நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.



உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, MNK.செந்தில், ஆனைகட்டி மதன், நெசவாளர் அணி அமைப்பாளர் நட்ராஜ், இளைஞர் அணி சூரியன் தம்பி, மனோஜ் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

இதேபோல், கவுண்டம்பாளையம் பகுதி கழகம் சார்பில், துடியலூர் பகுதி கழக அலுவலகத்தில், பகுதி கழக செயலாளர் சரத் விக்னேஷ் ஏற்பாட்டில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பகுதிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகள், செயல்வீரர்கள் அனைவரையும் இன்று (மே.4) சந்தித்து கோவை பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் நன்றி கூறி பாராட்டி மகிழ்ந்தார்.



உடன் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் T.P.சுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் அசோக் பாபு, முன்னாள் நகராட்சி தலைவர் சுந்தரம், இளைஞரணி மனோஜ், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...