கணபதிபாளையத்தில் உள்ள கல்குவாரியில் வெடிப்பொருட்கள் பதுக்கல் – இரண்டு பேர் கைது

ல்குவாரியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 950 எலக்ட்ரிக் டெனட்டர்கள், 350 ஜெலடின் குச்சிகள் உள்ளிட்ட 1300 வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தளபதி மற்றும் ராமசாமி என்ற இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரியில் இயங்கி வருகிறது. இதில் சில கல் குவாரிகள் அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரள மாநிலத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கல்குவாரிகளில் ஜெலட்டின் மற்று எலக்ட்ரிக் டெனரேட்டர் போன்ற வெடி பொருட்களைக் கொண்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது.



இந்தநிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் உரிய அனுமதியின்றி வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஆனைமலை போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அங்கு விரைந்த போலீசார் சோதனையிட்ட போது தளபதி (70) என்பவருக்கு சொந்தமான கல்குவாரி தோட்டத்தில் ஜெலடின் குச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து அங்கிருந்த 950 எலக்ட்ரிக் டெனட்டர்கள், 350 ஜெலடின் குச்சிகள் உள்ளிட்ட 1300 வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் தளபதி மற்றும் ராமசாமி என்ற இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...