சிங்காநல்லூர் அருகே செல்போன் கடை உரிமையாளருக்கு கத்திக்குத்து – போலீசார் விசாரணை

கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த செல்போன் கடை உரிமையாளரை வழிமறித்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் ரோட்டை சேர்ந்தவர் தினேஷ் (29). இவர் அங்குள்ள ராமானுஜம் நகரில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் நேற்று (மே.2) கடையை பூட்டி விட்டு பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிங்காநல்லூர் அருகே சென்றபோது எதிரே பைக்கில் வந்த 2 பேர் தினேசை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அதில், ஒருவர் கத்தியால் தினேசை குத்தினார். இதை பார்த்த சிலர் அங்கு ஓடி வந்தனர்.

இதைப்பார்த்து இருவரும் அங்கிருந்து தப்பிவிட்டனர். பின்னர் கத்திக்குத்தில் காயமடைந்த தினேஷ் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...