வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட இன இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் ஆய்வு

பிரசவ வார்டு, புற நோயாளிகள் வார்டு, எமர்ஜென்சி வார்டு, ஐசியு வார்டுகள் முறையாக பராமரிக்கப்படுகின்றதா? நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்படுகின்றதா? என்று மாவட்ட இன இயக்குனர் மருத்துவர் ராஜசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணியில் இல்லாததால் நோயாளிகள் சிரமப்பட்டு உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட இன இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் புதிதாக கட்டப்பட்டு இறுதி நிலையில் உள்ள மருத்துவ புதிய கட்டிடத்தை ஆய்வு செய்தார்.

ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கின்ற பிரசவ வார்டு, புற நோயாளிகள் வார்டு, எமர்ஜென்சி வார்டு, ஐ சி யு வார்டுகளை முறையாக பராமரிக்கப்படுகின்றதா?.



நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை கொடுக்கப்படுகின்றதா?. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகின்றதா? மருந்துகளின் காலாவதி தேதிகள் மற்றும் அனைத்து வார்டுகளின் கழிவறைகள், தண்ணீர் வசதி கிடைக்கிறதா? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.



புதியதாக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை உள்ளே நவீன சமையலறை மற்றும் அதற்கான உபகரணங்கள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து, உணவு கூடம் மற்றும் அனைத்து அறைகளிலும் முழுமையாக சிகிச்சைக்கு வரும் சாமானிய மக்களுக்கு பயன்பாட்டுக்கு உள்ளதா என்பதையும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் மருத்துவமனையில் காலை 8 மணி மற்றும் மதியம் 2 மணி மற்றும் இரவு 8 ஆகிய நேரங்களில் பணி மாற்றம் செய்து பணிக்கு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் வருகிறார்கள். இந்த சமயங்களில் பணியாளர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வரவில்லை என்று நோயாளிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால நோயாளிகள் காத்து இருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும் என்று ஆய்வில் தெரிவித்தார்.



புதிய வளாகத்தில் தேவையான உபகரணங்கள் மருத்துவர், செவிலியர், சமையலர், தூய்மை பணியாளர்கள், இரவு காவலர்கள் போன்றவர்களை நியமிக்க வேண்டும் என்று மருத்துவ பணியாளர்கள் தெரிவித்தனர்.

வால்பாறையில் இருக்கக்கூடிய பொதுமக்களின் நலனில் பெரும் அக்கறை கொண்டு இன்னும் சில நாட்களில் அனைத்து வசதிகளோடு புதிய மருத்துவமனை கட்டிடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று மாவட்ட இணை இயக்குனர் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...