குற்றப்பிரிவு ஆய்வாளர் மீனா குமாரியின் செயல்களை வெளிப்படுத்திய ஜூனியர் ரிப்போர்ட்டர் மீது தொடரும் பாதுகாப்பு பிரச்சனை

கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் மீனா குமாரி என்ற முன்னாள் குற்றப்பிரிவு ஆய்வாளர் மீது குற்றங்களை வெளிப்படுத்திய குருஸ் முத்து பிரிண்ஸ் அண்மையில் பல அசவுரியங்களையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டார். மே 2ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.


கோவை: கோவை ரத்தினபுரி காவல் நிலையத்தில் முன்னாள் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணி புரிந்த மீனா குமாரி மீது பல திடுக்கிட வைக்கும் உண்மை குற்றங்களை ஜூனியர் ரிப்போர்ட்டர் மாதம் இருமுறை இதழின் இணை ஆசிரியர் குருஸ் முத்து பிரிண்ஸ், மாதம் இருமுறை இதழில் அண்மையில் வெளியிட்டிருந்தார்.


அதன் பிறகு மீனா குமாரி ஆய்வாளரால் பல அசவுரியங்களும், மிரட்டல்களும் பல விதங்களில் வருவதால் குருஸ் முத்து பிரிண்ஸ் தனது உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு காவல்துறை தலைவரிடம் அண்மையில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார்.


அந்த புகார் தொடர்பான விசாரணை இன்று (மே.2) கோவை ரத்தினபுரி காவல் நிலைய ஆய்வாளர் மேற்பார்வைக்கு வந்திருந்தது.


பின்னர் விசாரணைக்கு புகார் தாரரான ஜூனியர் ரிப்போர்ட்டர் மாதம் இருமுறை இதழின் இணை ஆசிரியர் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். அப்போது எதிர் மனுதாரரும் காவல்துறை ஆய்வாளருமான மீனா குமாரி ஆஜராகாமல் தட்டிக் கழித்து இருந்தார்.


இந்த விசாரணைக்கு பின் பிரின்ஸ் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் காவல்துறையினர் திட்டமிட்டு எனது புகார் மனுவை தட்டி கழித்து ஆய்வாளர் மீனா குமாரியை காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தோடு ஒரு ஆய்வாளர் மீது கொடுத்த புகாரினை மற்றொரு ஆய்வாளர் விசாரிக்க பணித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...