திருப்பூரில் சமத்துவ கும்மியாட்ட விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்பு

நொய்யல் நதியை பாதுகாக்கும் நோக்கத்துடன், முத்தையன் கோவிலில் நடைபெற்ற சமத்துவ கும்மியாட்ட விழாவில் 100க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு ஆடினர்.


திருப்பூர்: கொங்கு மண்டலம் பல்வேறு கலைகளுக்கு பெயர் பெற்றது. இதில் இதில் மிக முக்கியமாக கும்மியாட்டம் இருந்து வருகிறது. கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் கொங்கு பகுதிகளுக்கு பெயர் பெற்ற கும்மி நடனம் ஆடுவது பலரையும் கவர்ந்து வருகிறது. இதுபோல் பலரும் இந்த கும்மியாட்டத்தை முறைப்படி கற்று அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில்,திருப்பூரில் வேலவன் கும்மி ஆய்வு மையம் சார்பில், நொய்யல் நதியை பாதுகாக்கவும், நொய்யல் ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பதை தடுத்து இயற்கையை காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்சமத்துவ கும்மி அரங்கேற்ற விழா திருப்பூர், தென்னம்பாளையத்தில் உள்ள முத்தையன் கோவில் பகுதியில் நடந்தது.



இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண் கவரும் வகையிலான ஒரே வண்ணத்திலான உடையணிந்து, உற்சாகமாக கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்வில் பங்கேற்று ஆடினர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எம்எல்ஏ செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...