உடுமலை அருகே முறையான குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

முறையான குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் காலி குடங்களுடன் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாழ்வு சரி செய்து மூங்கில்தொழவு கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் தற்காலிகமாக மறியலை மக்கள் கைவிட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மூங்கில் தொழவு ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையில் மூங்கில் தொழுவு கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாய் வாழ்வு பகுதி பெதம்பம்பட்டியில் உடைந்த உள்ள காரணத்தால் தண்ணீர் முறையாக மூங்கீல் தொழவு கிராமத்தக்கு வருவதில்லை என பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட குடிமங்கலம் ஒன்றிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.



இந்த நிலையில் இன்று ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் வாழ்வு உடனே சரி செய்து மூங்கில்தொழவு கிராமத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யபடும் என உறுதி கொடுக்கப்பட்டதால் தற்காலிகமாக பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

உடுமலை அருகே கிராம மக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தால் பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...