மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் பேச்சுவார்த்தை - போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜடையம்பாளையம் ஊராட்சி மக்கள்

சீரான குடிநீர் கேட்டு இரண்டாவது நாளாக மேட்டுப்பாளையம் - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.


கோவை: மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி, காரமடை, ஜடையம்பாளையம் ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து ஆலங்கொம்பு பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று (ஏப்ரல்.29) காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



பின்னர் தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் மற்றும் ஊராட்சி தலைவர் ஆர்.கே.பழனிச்சாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் சுமூக முடிவு எட்டியதையடுத்து கலைந்து சென்றனர்.



இந்த நிலையில் நேற்று போலீசார், வருவாய்த்துறையினர் உடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உரிய பலனளிக்காததால் இன்று (ஏப்ரல்.30) காலை இரண்டாவது நாளாக அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.



இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மேட்டுப்பாளையம் - சத்தி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் A.K.செல்வராஜ் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர், போராட்டத்தை மக்கள் வாபஸ் பெற்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...