காட்டன் ரீலிங் தொழிற்சாலையை அப்புறப்படுத்தக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

காட்டன் தூசு அதிக அளவில் வெளியேறுவதால் சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால், தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.


கோவை: நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகர் பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான, காட்டன் ரீலிங் தொழிற்சாலையால் சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுவதால், தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் இன்று (ஏப்ரல்.29) மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அளித்துள்ளனர்.

இது குறித்து மனுதாரர்கள் ஜீவானந்தம் மற்றும் கல்யாண சுந்தரம் ஆகியோர் கூறும் போது, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகில் உள்ள குருடம்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் கதவு எண் 31, பாம்பே நகர் என்ற இடத்தில், ஸ்ரீ குமரன் டெக்ஸ் என்ற பெயரில் காட்டன் ரீலிங் தொழிற்சாலை கடந்த 9 மாத காலமாக இயங்கி வருகிறது.

இந்த இடம் பாம்பே நகர், பாரதி நகர், கல்யாணசுந்தரம் நகர் ஆகிய பகுதிகள் அடங்கிய பகுதியாகும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஸ்ரீ குமரன் டெக்ஸ்ட் என்ற தொழிற்சாலை அந்த பகுதியில் துவங்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து காட்டன் தூசு அதிக அளவில் வெளியேறுகிறது. இதனால் சுற்றுப்புறச் சூழல், காற்று மாசு மற்றும் ஒலி மாசு ஏற்படுவதால், தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

Newsletter

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...