எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள் - பொள்ளாச்சியில் முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் பேட்டி

பிரச்சனை என்று வரும்போது கோவில் சூறையாடப்படுகிறது. இப்போதாவது திருந்தி வாருங்கள். எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள் என்று முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவனடியார்கள், முருக பக்தர்கள் அனைத்து ஆன்மீக அன்பர்களையும் ஒருங்கிணைக்கும் ஆன்மீக விழா நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் போலீஸ் ஐஜி பொன்மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்.

இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு சிவனடியார்கள், முருக பக்தர்கள், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் போலீஸ் ஐஜி .பொன்மாணிக்கவேல் பேட்டி அளிக்கையில் கூறியதாவது. இந்துக்கள் உடைந்தனர், ஆதீனம் ஒரு புறம், வைணவர்கள் ஒரு புறம், சைவர்கள் ஒருபுறம் என அனைவரும் உடைந்து தொங்குவதை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் தொங்கிக் கொள்ளுங்கள். கருத்து வேறுபாடுகள் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் ஒன்றாக வாருங்கள். பிரச்சனை என்று வரும்போது கோவில் சூறையாடப்படுகிறது. இப்போதாவது திருந்தி வாருங்கள் எல்லாரும் மனரீதியில் ஒன்றாக சேர்ந்து கோவிலை காப்பாற்றுங்கள். கோவிலுக்கு மட்டும் பிரச்சினை என்றால் எல்லாரும் ஒன்றாய் சேருங்கள். இந்த கூட்டத்தில் மட்டுமே எல்லாரையும் ஒருங்கிணைக்க காரணம் தனித்தன்மையை வைத்துக் கொள்ளுங்கள் விட்டு விடாதீர்கள்.

சுதந்திரமாக செயல்படுங்கள். ஆனால் பிரச்சனை என்று வரும்போது கோவில் சம்பந்தப்பட்டது கோவில் இருக்கக்கூடிய தெய்வ விக்கிரகங்களுக்கு கோவில் சொத்துக்களுக்கு பிரச்சினை வரும்போது காக்கா கூட்டம் போல் ஒன்றாக வரவேண்டும் என்ற ஒரு சின்ன முயற்சி எடுக்கிறேன். இதிலும் நமக்கு பின் வாங்கியது எல்லாம் வரும் ஜெயிக்க எல்லாம் என்னால் முடியாது நன்றாக தெரியும். பின்வாங்கி வர முயற்சி அதிகம் பன்னிகொண்டேதான் போவேன். எல்லாரையும் ஒன்றாக கொண்டு வருகிறோம் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...