பொய் வழக்கு பதிவு செய்து வாலிபரை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி உறவினர்கள் போராட்டம்

விசாரணைக்காக அழைத்து சென்ற வாலிபரை கடுமையாக தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்த கோவை சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர், ஆனந்த் இவரையும் அவரது அண்ணன் அரவிந் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் மார்ச் மாதம் ஜாமீனில் வந்த ஆனந்தை , கொலை முயற்சி வழக்கு தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் கடந்த வாரம் விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை தாக்கியதில் கால் உடைந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மனமுடைந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆனந்தின் தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில் தன் சகோதரரை தாக்கி பொய் வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆனந்தின் தங்கை மற்றும் அவர்களது உறவினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சரவணம்பட்டி காவல்துறையினர் வேண்டும் என்றே தன் சகோதரன் மீது பொய் வழக்கு தொடுத்து சித்தரவதை செய்துள்ளதாகவும், இது குறித்த கேட்ட தன்னையும் தனது தாயாரையும் சாதி பெயரை கூறி தாகாத வார்தையில் திட்டியதாகவும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்தையில் ஈடுபட்டதை அடுத்து, சரவணம்பட்டி காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து கலைந்து சென்றனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...