கோடை விடுமுறை காலத்தில் கோவை - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவை

கோடை விடுமுறையையொட்டி கோவை - பரௌனி இடையே சிறப்பு ரயில் சேவைகள் ஏப்ரல் 23 முதல் ஜூன் 28 வரை இயங்கும். இந்த ரயில் பல முக்கிய நிலையங்களில் நிற்கும்.


கோவை: சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் கோடை விடுமுறையொட்டி ஏப்ரல் 20 அன்று அறிவித்துள்ளபடி, கோவை மற்றும் பரௌனி இடையே வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. ஏப்ரல் 23 முதல் ஜூன் 25 வரை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கோவையில் இருந்து காலை 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06059) வியாழக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு பரௌனி நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, பரௌனி நிலையத்தில் இருந்து ஏப்ரல் 26 முதல் ஜூன் 28 வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு புறப்படும் பரௌனி - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06060) திங்கள்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும். இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், விஜயவாடா, ஏலூரு, ராஜமுந்திரி, பாா்வதிபுரம், ராயகடை, முனிகுடா, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, தன்பாத், சித்தரஞ்சன், மதுப்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்றும் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...