கோவையில் 1192 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1.07 லட்சம் பறிமுதல் - 11 பேர் கைது

வடவள்ளி வீரகேரளம், போத்தனூர், சுந்தராபுரம், சிங்காநல்லூர், பீளமேடு ஆகிய பகுதிகளில் மாநகர போலீசாரும், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரும் நடத்திய சோதனையில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு, 1192 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவை மக்களவை தேர்தலையொட்டி கடந்த 17,18,19 ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து மாநகர போலீசார், மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கோவை மாநகரில் நேற்று (ஏப்ரல்.19) பல்வேறு இடங்களில் சோதனை செய்தனர்.

அப்போது வடவள்ளி வீரகேரளம் டாஸ்மாக் கடை அருகே சென்ற போது ஒரு கும்பல் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து ஒரு குவார்ட்டர் பாட்டில் ரூ.250 முதல் 300 வரை விற்றது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார் சப்ளையர்கள் சிவகங்கையை சேர்ந்த ராஜா(28), மருதுபாண்டி(27), விருது நகரை சேர்ந்த தமிழ்செல்வன்(27), புதுக்கோட்டையை சேர்ந்த செபாஸ்டியன்(42), கிருஷ்ணன்(41), ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 844 மது பாட்டில்கள் மற்றும் ரூ.1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

இதேபோல, போத்தனூர், சுந்தராபுரம், சிங்காநல்லூர், பீளமேடு மற்றும் மது விலக்கு அமல்பிரிவு போலீசார் புதுக்கோட்டையை சேர்ந்த விக்னேஷ்வரன்(31), வீரசேகரன்(42), அன்புகுமார்(44), மகாலிங்கம்(27), கடலூரை சேர்ந்த சுகுமார்(29), கோவை பிள்ளையார் புரத்தை சேர்ந்த அன்புதுரை(32), ஆகிய 6 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து 348 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் போலீசார் 11 பேரை கைது செய்து 1192 மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 1.07 லட்சத்தை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...